News May 7, 2025
நெல்லையில் காப்பகத்தில் தங்கிப் படித்த சிறுமி உயிரிழப்பு

பேட்டை நரிக்குறவர் பகுதியைச் சேர்ந்த மதுரை வீரன் மகள் முத்துலட்சுமி. (16) பாளை அருகே பர்கிட் மாநகர் காப்பகத்தில் தங்கி அருகே உள்ள பள்ளியில் படித்து வந்தார்.உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் அவரை காப்பக ஊழியர்கள் பாளை அரசு மருத்துவமனைக்கு நேற்று கொண்டு சென்றனர். செல்லும் வழியில் அவர் இறந்தார். இது குறித்து பாளை வட்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 12, 2025
நெல்லை ரயில்கள் 3 நாட்களுக்கு ரத்து

நெல்லை ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடை அமைக்கும் பணிக்காக திருச்செந்தூரில் இருந்து காலை 10.10 மணிக்கு நெல்லைக்கு புறப்படும் பயணிகள் ரயிலானது வரும் 13, 14 மற்றும் 15 ஆகிய 3 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு இரயில்வே அறிவத்துள்ளது. மேலும், செங்கோட்டையில் இருந்து காலை 10.05 மணிக்கு புறப்பட்டு நெல்லை வரும் ரயில் சேரன்மகாதேவி வரை மட்டுமே மேற்கண்ட 3 நாட்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 11, 2025
நெல்லை: கிறிஸ்தவர்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள் பயனடையும் வகையில் ஜெருசலின் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய கிறிஸ்தவர்களுக்கு இ சி எஸ் முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மாவட்ட சிறுபான்மை நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். *SHARE
News November 11, 2025
மாவட்ட அணைகளின் நீர்வரத்து மற்றும் விவரங்கள்

திருநெல்வேலி மாவட்டம் சுற்றியுள்ள பகுதிகளிலே அணைகளின் நீர்மட்ட விபரங்கள் பாபநாசம் அணை 143/64.84%mm, மணிமுத்தாறு அணை 118/66.54%mm, செயலாளார் அணை156/52.39%mm, வடக்குப்பச்சார அணை 49.30/4.64%mm, நம்பியார் அணை22.96/21.21%mm, கொடுமுடியாறு அணை 52.50/79.96%mm, மாவட்டத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. மூன்று அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.


