News November 22, 2024

நெல்லையில் இன்று நோ அலார்ட்; மழைக்கு வாய்ப்பு குறைவு

image

நெல்லை மாவட்டத்தில் சில நாட்களாக தொடர்ந்து பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்து வந்தது. நேற்று காலை மாநகரில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பதிவானது. குறிப்பாக பாளையங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இந்நிலையில் இன்று(நவ.22) நெல்லை மாவட்டத்துக்கு எந்த அலார்ட்டும் கொடுக்கப்படவில்லை. எனவே மழை பெய்ய வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது.

Similar News

News December 9, 2025

நெல்லை: SBI வங்கியில் வேலை., தேர்வு இல்லை! APPLY

image

நெல்லை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News December 9, 2025

நெல்லை: விவசாயி தூக்கிட்டு தற்கொலை

image

திருநெல்வேலி, முக்கூடல் அருகே உள்ள தாளார்குளம் கிராமத்தை சேர்ந்த ஸ்டீபன் துரைராஜ் மகன் ஆரோக்கியஜோதி (46). விவசாயியான இவர் தீடிரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த முக்கூடல் போலீஸார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து முக்கூடல் போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

News December 9, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று ( டிச.8) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் சுரேஷ் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!