News August 24, 2025
நெல்லைக்கு விநாயகர் சதுர்த்தி சிறப்பு ரயில்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மைசூரு – நெல்லை இடையே ஆக.26, 27 ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மைசூரில் இருந்து ஆக.26 இரவு 8:15 மணிக்குப் புறப்படும் ரயில், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக ஆக. 27 காலை 10:50 மணிக்கு நெல்லையை சென்றடையும். மறுமார்க்கத்தில், நெல்லையில் இருந்து ஆக.27 பிற்பகல் 3:40 மணிக்குப் புறப்படும் ரயில், ஆக. 28 காலை 5:50 மணிக்கு மைசூரை சென்றடையும். *ஷேர்
Similar News
News January 22, 2026
நெல்லை: அரசிற்கு எச்சரிக்கை விடுத்த அதிமுக நிர்வாகி

நெல்லை மாநகர மேலப்பாளையத்தில் ரூ.7 கோடி மதிப்பில் அரசு மருத்துவமனை கட்டப்பட்டு ஒரு ஆண்டுகள் பின்பு திறக்கப்பட்டது. இவ்வாறு திறக்கப்பட்ட இந்த மருத்துவமனை இன்னும் செயல்படாமல் உள்ளது. எனவே உடனடியாக மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை என்றால் ஒரு மாதத்தில் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News January 22, 2026
மாநகர பகுதிகளில் இரவு ரோந்துப்பணி அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர காவல்துறை, இன்று {ஜனவரி.21} இரவு ரோந்துப்பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் பெயரை, அறிவித்துள்ளது. அதன்படி, டவுண் பகுதியில் மனோகரன், பேட்டையில் மாசானமுத்து, சந்திப்பில் நடராஜன், பாளையில் முருகன், மருத்துவக் கல்லூரி பகுதியில் கோபால கிருஷ்ணன், மேலப்பாளையத்தில் கணேசன், பெருமாள்புரத்தில் செந்தில்குமார் ரோந்து பணிகளை மேற்கொள்கின்றனர்.
News January 21, 2026
நெல்லை: தலைமறைவான கொலை குற்றவாளி கைது

திருநெல்வேலி மாநகர காவல் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு கொலை வழக்கில், தொடர்புடைய திருநெல்வேலி பெருமாள்புரம் சுகுமார், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். அதனைத்தொடர்ந்து, அவர் மீது நீதிமன்றத்தால் ‘பிடி வாரண்டு’ பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், தலைமறைவான குற்றவாளி சுகுமாரை இன்று {ஜனவரி.21} பாளையங்கோட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.


