News August 22, 2024

நீலகிரி: வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியது

image

நீலகிரி மாவட்டம் பந்தலூர், சோலாடி பகுதிகளில் கடந்த 1 மாத காலமாக வளர்ப்பு நாய்களை வேட்டையாடி வரும் சிறுத்தையை பிடிக்க மக்கள், வனத்துறையை வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து தினபுரம் என்ற இடத்தில் வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தையை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கூண்டில் சிக்கிய சிறுத்தையை வனத்துறையினர் நேற்று முத்தங்கா வனப்பகுதியில் விடுவித்தனர்.

Similar News

News November 7, 2025

நீலகிரியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்

image

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் செயல்படும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், நவம்பர் 8-ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, கூடலூர் செம்பாலா அருகேயுள்ள G.T.M.O மேல்நிலைப் பள்ளியில் நலத்திட்ட முகாம் நடைபெற உள்ளது. முகாமில் பல்வேறு துறைசார் மருத்துவர்கள் பங்கேற்க இருப்பதால், பொதுமக்கள் தவறாமல் வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News November 7, 2025

நீலகிரி இரவு ரோந்து போலிசாரின் விபரம்

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர், குந்தா, ஆகிய ஆறு தாலுகாக்களிலும் இன்று (06.11.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். உங்கள் பாதுகாப்பு.! எங்கள் சேவை..! என நீலகிரி மாவட்ட காவல் துறையின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது

News November 6, 2025

நீலகிரி: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

image

நீலகிரி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!