News July 15, 2024

நீலகிரி அரசு கலைக்கல்லூரிக்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும்

image

நீலகிரி மாவட்டத்தில் அரசு கலைக்கல்லூரி 1955ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த காமராஜரால் தொடங்கி வைக்கப்பட்டது. பெரும் சவால்களுக்கு மத்தியிலேயே இந்த கல்லூரி உருவாவதற்கு முக்கிய பங்காற்றிய முன்னாள் முதலமைச்சர் காமராஜருக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த கல்லூரிக்கு காமராஜரின் பெயரை சூட்ட வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆவண காப்பகத்தின் இயக்குனர் வேணுகோபால் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

Similar News

News July 9, 2025

நீலகிரி : பெண்களுக்கு ரூ.50,000 திருமண உதவி!

image

தமிழக அரசு சார்பில், பெற்றோரில்லாத பெண்களுக்காக, அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டம் 1-ல் ரூ.25,000, திட்டம் 2-ல் ரூ.50,000 உதவித்தொகையோடு, தாலி செய்வதற்காக 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க, நீலகிரி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு சென்றோ அல்லது இ-சேவை மையங்களிலோ விண்ணப்பிக்கலாம். SHARE IT <<17008006>>(தொடர்ச்சி 1/2)<<>>

News July 9, 2025

திட்டத்திற்கான தகுதிகள் என்ன?

image

▶️அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவி திட்டம் – 1 இன் கீழ் உதவித்தொகை (ரூ.25,000) பெற கல்வித் தகுதி தேவையில்லை ▶️ திட்டம் – 2 இன் கீழ் உதவித்தொகை (ரூ.50,000) பெற டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் ▶️ விண்ணப்பதாரர் பெற்றோர்களால் கைவிடப்பட்ட அல்லது பெற்றோர்களை இழந்தவராக இருக்க வேண்டும் ▶️ திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பாகவே விண்ணப்பிக்க வேண்டும்.

News July 9, 2025

நீலகிரியில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள்

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியீட்ட செய்தி குறிப்பில், ‘தமிழ்நாடு முழுவதும் தமிழ் வளர்ச்சித் துறை மூலம் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் மாவட்டம் மைய நூலகம், சோகத்துறை சமுதாயக்கூடம், கூடலூர் ஜெயம் கல்வி நிலையம் ஆகிய இடங்களில் பயிற்சி கட்டணமின்றி நடத்தப்பட உள்ளது. இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 9597874742ஐ அழைக்கவும்.

error: Content is protected !!