News May 17, 2024

நீலகிரி அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவு வெயிலின் தாக்கம் அதிகரித்து, நீர்நிலைகள் வறண்டு காணப்பட்டன. இந்நிலையில், தற்போதைய தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள குந்தா உள்ளிட்ட அனைத்து அணைகள் மற்றும் குடிநீர் தடுப்பு அணைகளில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் நடப்பாண்டு குடிநீர் பிரச்சனை ஏற்படாது என்று நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News November 15, 2025

குன்னூர் மக்களே: கவனமா இருங்க!

image

குன்னுார்- மேட்டுப்பாளையம் மலை பாதையோரங்களில், 3மாதங்களுக்கு பிறகு யானை கூட்டம் தற்போது மீண்டும் பர்லியார் பகுதிக்கு வர துவங்கியுள்ளன. நேற்று காலை, 7மணியளவில், பார்லியார் அருகே சாலை ஓரத்தில் 2குட்டிகளுடன், 6 காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன. இவை பர்லியார் குடியிருப்பு மற்றும் மலைப் பாதையில் உலாவரும் என்பதால் மக்கள அச்சத்தில் உள்ளனர். மித வேகத்தில் வாகனங்களை இயக்க வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News November 15, 2025

நீலகிரி: காவல் அதிகாரிகளின் இரவு ரோந்து பணி விபரம்!

image

நீலகிரி மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News November 14, 2025

நீலகிரி: கேன் தண்ணீர் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு!

image

நீலகிரி மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!