News January 13, 2025

நாளை 2 மணி வரை ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள்

image

பொங்கல் விடுமுறை தினமான நாளை ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என சென்னை தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிறு அட்டவணைப்படி நாளை காலை 8 மணி முதல் 2 மணி வரை ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படும் என தெற்கு ரயில்வே சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 7, 2025

சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு!

image

சென்னையில் வளர்ப்பு பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி (ரேபிஸ்) தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் வரும் நவ.9, 16 மற்றும் 23 என ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடைபெறும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள நாய் இனக்கட்டுப்பாடு மையத்தில் காலை 8.00 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க.

News November 7, 2025

சென்னை: அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

image

தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இமெயில் மூலம் மிரட்டல் வந்தது. தகவலின் பேரில் தேனாம்பேட்டை போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் வெடிகுண்டு இருப்பது போல தகவல் புரளி என தெரியவந்தது. தற்போது போலீசார் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 7, 2025

சென்னையில் இன்று கரண்ட் கட்!

image

சென்னை, மின்வாரியம் சார்பில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் அம்பத்துார் பழனியப்பா, புதுார், ஏ.கே.அம்மன், பானு நகர், முருகம்பேடு, பசும்பொன் நகர், கல்லிக்குப்பம், சந்திரசேகரபுரம், வெங்கடாபுரம், ஆலந்துார் எம்.கே.என்., சாலை, ஆஷர்கானா, மார்க்கெட் லேன், ஜி.எஸ்.டி., சாலை, ஈஸ்வரன் கோவில் தெரு, ஆதம்பாக்கம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி-2 மணி வரை மின்தடை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர்.

error: Content is protected !!