News August 21, 2024
நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மாதம் தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (ஆகஸ்டு 22) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் முத்து அரங்கில் வைத்து நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 8, 2025
தூத்துக்குடி: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 20 ஆண்டு சிறை

கோவில்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கயத்தாறை தேர்ந்த காளீஸ்வரன் என்பவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இவர் மீதான வழக்கில் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் காளீஸ்வரனுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.
News November 8, 2025
தூத்துக்குடியில் அப்ரண்டீஸ் பயிற்சி! கலெக்டர் அறிவிப்பு

தூத்துக்குடியில் வரும் நவ. 10-ம் (திங்கள்) தேதி பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் கோரம்பள்ளம் அரசு ITI நிலையத்தில் நடைபெறவுள்ளது. இச்சேர்க்கை முகாமில் 8,10, 12th படித்த இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி (அப்ரண்டிஸ்) பெறாதவர்கள் என அனைவரும் உரிய அசல் சான்றிதழ்கள், ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் அறிவுத்தியுள்ளார்.
News November 7, 2025
தூத்துக்குடி: தாசில்தார் எண்கள்.. SAVE பண்ணுங்க.!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாசில்தார் எண்கள் மாவட்ட இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக உள்ளது.
1.தூத்துக்குடி-0461-2321448
2.ஸ்ரீவைகுண்டம்-04630-255229
3.திருச்செந்தூர்-04639-242229
4.சாத்தான்குளம்-04639-266235
5.கோவில்பட்டி-04632-220272
6.ஓட்டப்பிடாரம்-0461-2366233
7.எட்டயபுரம்-04632-271300
8.விளாத்திகுளம்-04638-233126
9.ஏரல்-04630-270055. SHARE பண்ணுங்க.


