News May 9, 2024
நாய்கள் கடித்து படுகாயமடைந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை!

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் கடந்த 5ம் தேதி 7 வயது சிறுமியை 2 வளர்ப்பு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சிறுமிக்கு இன்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. சிறுமி நலமுடன் இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள், வரும் 14 ஆம் தேதி அவரை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என கூறியுள்ளனர்.
Similar News
News February 11, 2026
மருத்துவமனையை திறந்து வைத்த அமைச்சர்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கிண்டியில் இன்று காலை புதிய தனியார் மருத்துவமனை திறந்து வைத்தார். பின்னர் மருத்துவமனையில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ள என்பதை குறித்து பார்வையிட்டார். மேலும் சிறப்பம்சங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கருவிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
News February 11, 2026
குடும்ப தகராறில் பெண் தீக்குளிப்பு: போலீசார் விசாரணை

சென்னை வியார்பாடியை சேர்ந்தவர் நந்தினி (34). இவர் குடும்பதகராறு காரணமாக நேற்று (பிப்.10) உடலில் டீசலை ஊற்றி தீக்குளித்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தகவலறிந்து வந்த வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 11, 2026
சென்னை: பைக், காருக்கு fine-ஆ? Cancel செய்வது ஈஸி!

சென்னை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <


