News June 19, 2024
நாமக்கல்: 8 இடங்களில் நீர் பரிசோதனை

நெல் வயல்களில், ஏரி தண்ணீருடன், நாமக்கல் நகராட்சியிலிருந்து வரும் கழிவு நீர் துாசூர் ஏரியில் கலப்பதால் நீர் மாசடைந்துள்ளதாக வந்த புகாரையடுத்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் தலைமையிலான குழுவினர், நேற்று ஆய்வு செய்து, எட்டு இடங்களில் நீர் மாதிரி சேகரித்து பரிசோதனைக்கு எடுத்து சென்றனர். நெல் வயல்களில் ஏரி தண்ணீருடன், நகராட்சி கழிவு நீரும் கலந்ததால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டது.
Similar News
News January 13, 2026
நாமக்கல்: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

அல்லாள இளைய நாயக்கர் அரசு விழா வரும் 15-ல் நடைபெற உள்ளது. இதனையொட்டி ஜேடர்பாளையம், வேலூர் காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட அரசின் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட நாளில் 10 அரசின் மதுபான சில்லறை விற்பனை கடைகளை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.
News January 13, 2026
நாமக்கல்: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

நாமக்கல் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <
News January 13, 2026
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு !

நாமக்கல்லில் நாளை ( ஜனவரி.14) புதன் இரவு 07:45-க்கு பெங்களூரு, ஹூப்ளி, மும்பை, சூரத், அகமதாபாத், ஜோத்பூர், பிகானீர் வழியாக இயக்கப்படும் 22497/22498 ஶ்ரீ கங்காநகர் – திருச்சி – ஶ்ரீ கங்காநகர் ஹம்சாஃபர் ரயில் நாமக்கல் வழியாக செல்ல உள்ளது. ஆகையால், ரயில் பயணிகள் இதனை பயன்படுத்தக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


