News October 19, 2025
நாமக்கல்: ரத்தம் இல்லாமல் யுத்தம் செய்த கவிஞர்!

‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’, தமிழன் என்று சொல்லாடா தலைநிமிர்ந்து நில்லடா மற்றும் ‘கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்’ போன்ற வைர வரிகளைத் தமிழ் மக்களுக்கு தந்த தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞரான நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனாரின் பிறந்த தினம் இன்று. மோகனூரில் பிறந்த மண்ணின் மைந்தனுக்கு மரியாதை செய்வோம்! உங்களுக்கு பிடித்த நாமக்கல் கவிஞர் வரிகளை கமெண்ட் பண்ணுங்க
Similar News
News December 7, 2025
நாமக்கல்: கிறிஸ்மஸ் பண்டிகைக்காக சிறப்பு ரயில்கள்!

கிருஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு, நாமக்கல் வழியாக பெங்களூரில் இருந்து தூத்துக்குடிக்கு 2 வாரங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. மைசூரில் இருந்து மாண்டியா, கெங்கேரி, பெங்களூர் சிட்டி, ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல் கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக தூத்துக்குடி வரை செல்கிறது. இதனால் பல்வேறு சிறப்பு ரயில்கள் தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 7, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை!

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று டிசம்பர்-7ஆம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.6.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தீவன மூலப் பொருட்களின் விலை உயர்வு மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், முட்டையின் தேவை அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இதே விலை நீடித்து வருகிறது.
News December 7, 2025
நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (டிச.07) நாமக்கல் – (பாலசந்தர் – 9498169138) ,வேலூர் – (தேசிங்கராஜன் – 9442260691), ராசிபுரம் – (கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் – (மருதுபாண்டி – 965595530) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.


