News October 18, 2025

நாமக்கல் மக்களே இன்று கவனம்!

image

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையத்தால் தெரிவிக்கப்படுள்ளது. வெளியே செல்வோர் பாதுகாப்பாக செல்லவும். அதிகம் SHARE பண்ணுங்க!

Similar News

News November 12, 2025

மோகனூர் அருகே விபத்து ஒருவர் பலி!

image

மோகனூர் அடுத்த காக்கா தோப்பு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (37). இவர் கரூர் மாவட்டம் புகளூரில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை தனது ஸ்கூட்டரில் மோகனூரில் இருந்து பரமத்திவேலூர் சாலையில் வள்ளியம்மன் கோவில் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற பஸ் எதிர்பாராத விதமாக சதீஷ்குமார் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அயர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

News November 12, 2025

நாமக்கல்லில் வேலை – அறிவித்தார் ஆட்சியர்!

image

ஆட்சியர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் மாவட்டத்தில் காலியாக உள்ள 9 மருத்துவ ஆலோசகர் பணியிடத்திற்கு 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை பட்டதாரிகள், முழு விவரங்களுடன் வரும் 17.11.25 நடைபெறும் நேரடி நியமனத்தேர்வில் கலந்துகொள்ளலாம். இடம் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிட்மோகனூர் சாலை சன்னியாசிகுண்டு!

News November 12, 2025

நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று நவம்பர்.11 நாமக்கல்-( TR.BALACHANDAR – 9498169138 ) ,வேலூர் -( TR.RAVI – 9498168482 ), ராசிபுரம் -( TR.GOVINDHASAMY – 9498169110 ), பள்ளிபாளையம் -( VENKATACHALAM – 9498169150 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!