News August 23, 2024
நாமக்கல்: பட்டத்தை வென்ற கல்லூரி மாணவர்

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கலை, அறிவியல் கல்லூரி, கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ட்ரீம்சோன் நிறுவனம் ஆகியவை இணைந்து கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பை நடத்தியது. இதில் மொத்தம் 27 கல்லூரிகள் பங்கேற்றன. இதில் நாமக்கல் எக்ஸல் வணிகவியல், அறிவியல் கல்லூரி மாணவர் எம்.தௌபிக், ‘மிஸ்டர் கைத்தறி மகாராஜா’ என்ற பட்டத்தை வென்றார், அவருக்கு கோப்பை மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
Similar News
News November 13, 2025
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 12, 2025
நாமக்கல்: கால்நடை மருத்துவ ஆலோசகர் பணி!

நாமக்கல் ஆவின் நிறுவனத்தில் தற்காலிக அடிப்படையில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள், உரிய பட்டப்படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சில் சான்றிதழ்களுடனும், வரும் நவ.17ம் தேதி காலை 11 மணிக்கு நாமக்கல் – மோகனூர் சாலை, கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள பொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெறும் நேரடி நியமன தேர்வில் கலந்து கொள்ளலாம்.
News November 12, 2025
எம்.பி ராஜேஷ்குமார் நாளை கலந்து கொள்ளும் நிகழ்வு!

மாநிலங்களவை உறுப்பினர் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான ராஜேஷ் குமார் நாளை (நவ.13) காலை நாமக்கல் மாநகராட்சியில் தோழி விடுதி அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு மற்றும் பழையபாளையம் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நிகழ்வு மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள இருக்கிறார்.


