News November 29, 2024
நாமக்கல்: கடன் வழங்கும் திட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் வாழும் இலங்கைத்தமிழர் மறுவாழ்வு மையத்தில் உள்ள இலங்கைத்தமிழர்களுக்கு வங்கிகள் மூலம் சிறு மற்றும் குறு வணிகங்களுக்கு கடன் உதவி வழங்க தகுதியான பயனாளிகளை கண்டறிந்து மாவட்ட அளவிலான தொழில்நுட்பக்குழு மூலம் ₹1 லட்சம் முதல் ₹2 லட்சம்வரை கடன் வழங்க உள்ளது விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலக 3ம் தளம், அகதியர் மறுவாழ்வு மையத்தில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
Similar News
News November 11, 2025
நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு நற்செய்தி!

அத்தனூர், வனவியல் விரிவாக்க மையம் சார்பில் நாமக்கல்லில் உள்ள தனியார் நிலங்களில் ஓராண்டுக்கு மேல் தரிசாக விவசாய பயன்பாட்டுக்கு அல்லாத நிலங்களிலும், மற்ற விவசாயி நிலங்களின் வயல் முழுவதும், வரப்பு பகுதியிலும் மகாகனி, தேக்கு, செம்மரம், வேம்பு, சந்தனம் உள்ளிட்ட பல இன செடிகள் இலவசமாக நடவு செய்து தரப்பட உள்ளது. ஆகவே, ஆர்வமுள்ள விவசாயிகள் 8940133289, 9751051006 என்ற எண்களை தொடர்பு கொண்டு பயனடையலாம்.
News November 10, 2025
நாமக்கல் விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுக்கோள்!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பி.எம்.கிசான் பயனாளிகளுக்கு அடுத்த தவணைத் தொகை விடுவிக்கப்படவுள்ளது. எனவே, இதுநாள் வரை தனித்துவ விவசாய அடையாள எண் பெறாத விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை (ம) தோட்டக்கலை அலுவலகத்தையோ (அ) பொது சேவை மையத்திலோ ஆதார் எண், சிட்டா, தொலைபேசி எண் ஆகியவற்றை கொடுத்து தனித்துவ விவசாய அடையாள எண்ணுக்கு உடனடியாக பதிவு செய்து பயன்பெறுமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
News November 10, 2025
நாமக்கல்: இலவச தையல் மிஷின் பெற விண்ணப்பிக்கலாம்!

நாமக்கல்லில் உள்ள முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண், திருமணமாகாத மகள்கள் அரசின் இலவச தையல் மிஷின் பெற உரிய ஆவணங்களுடன் நவ.25ந் தேதிக்குள் உதவி இயக்குநர் முன்னாள் படைவீரர் நல அலுவலகம், நாமக்கல் முகவரியில் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்கு மத்திய, மாநில அரசு (ம) அரசு சார்ந்த நிறுவனங்களில் குறைந்தது 3 மாத தையல் பயிற்சி முடித்து சான்று பெற்றிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 40.


