News October 13, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை !

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் நேற்று (அக்டோபர் 12) நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.05 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை (அக்டோபர் 13) முதல் முட்டையின் விலை ரூ.5.05 ஆகவே நீடிக்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
Similar News
News December 14, 2025
குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு: UPDATE

குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவையின் சார்பில் நேற்று இரவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன இதன்படி மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி அடுத்த வருடம் ஜனவரி மாதம் 18ஆம் தேதி குமாரபாளையம் பகுதியில் நடைபெற உள்ளதாகவும். இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட உள்ளதாகவும் அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
News December 14, 2025
வையப்பமலை அருகே சோகம்: தொழிலாளி விபரீத முடிவு!

வையப்பமலை அருகே இராமாபுரம் அடுத்த மாந்தோப்புகாலனி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி செங்கோட்டுவேல் (37) குடும்ப தகராறில் மனவிரக்தி அடைந்து நேற்று விஷம் குடித்துள்ளார். உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார், இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (டிச.13) இறந்து விட்டார். இது குறித்து எலச்சிபாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 14, 2025
வையப்பமலை அருகே சோகம்: தொழிலாளி விபரீத முடிவு!

வையப்பமலை அருகே இராமாபுரம் அடுத்த மாந்தோப்புகாலனி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி செங்கோட்டுவேல் (37) குடும்ப தகராறில் மனவிரக்தி அடைந்து நேற்று விஷம் குடித்துள்ளார். உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார், இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (டிச.13) இறந்து விட்டார். இது குறித்து எலச்சிபாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


