News November 26, 2025

நான் பிரதமராக உயர இதுவே காரணம்: மோடி நெகிழ்ச்சி

image

அரசியலமைப்பு தினத்தையொட்டி PM மோடி மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். தன்னை போன்ற எளிய குடும்பத்தை சேர்ந்தவர் PM ஆனது அரசியலமைப்பு சட்டத்தால்தான் என்ற அவர், அரசமைப்புதான் கனவு காணும் சக்தியையும், அதை நோக்கி உழைக்கும் வலிமையும் அளிக்கிறது என கூறியுள்ளார். மேலும், வலுவான ஜனநாயகத்தின் அடித்தளமாக இருக்கும் அரசியலமைப்பில் உள்ளவற்றை எப்போதும் பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News January 15, 2026

சற்றுமுன்: ‘விஜய் உடன் பொங்கல்’

image

டெல்லியில் PM மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் ‘பராசக்தி’ படக்குழுவினர் பங்கேற்றதை காங்., விமர்சித்து வருகிறது. இந்நிலையில், விஜய் ஒரு நடிகராக இருந்திருந்தால் அவரையும் இந்த விழாவிற்கு அழைத்திருப்போம் எனத் தமிழிசை கூறியுள்ளார். மேலும், ‘ஜன நாயகன்’ ரிலீஸாகும் போதே தங்களுக்கு பொங்கல் என விஜய் ரசிகர்கள் கூறிவிட்டதால், அப்போது அவர்களுடன் சேர்ந்து நாமும் பொங்கல் கொண்டாடுவோம் என தெரிவித்துள்ளார்.

News January 15, 2026

இன்ஸ்டாகிராமில் துப்பாக்கி விற்ற திமுக நிர்வாகி!

image

நெல்லையில் இன்ஸ்டாகிராம் மூலம் துப்பாக்கி விற்பனை செய்ததாக திமுக பொறியாளர் அணி நிர்வாகி ரத்தினம் பாலா உள்ளிட்ட மூவர் கைதானதை அதிமுக விமர்சித்துள்ளது. திமுக ஆட்சியில் கூலிப்படை, போதைப்பொருள் தாண்டி துப்பாக்கி நெட்வொர்க்கும் வளர்ந்துள்ளதாகவும், இச்செய்தியால் மக்கள் நிம்மதியாக நடமாட அச்சப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. அதோடு கைதான ரத்தினம் பாலா DCM-உடன் இருக்கும் போட்டோவும் வைரலாகி வருகிறது.

News January 15, 2026

ராஜ மாதா காலமானார்

image

தர்பங்கா அரச குடும்பத்தின் கடைசி மகாராணி காமசுந்தரி தேவி(96) காலமானார். மகாராஜா காமேஷ்வர் சிங் மறைவிற்கு பிறகு, ராஜமாதாவாக உருவெடுத்த இவர் தர்பங்காவில் பனாரஸ் இந்து, பாட்னா, அலகாபாத் பல்கலைக்கழகங்கள் அமைவதற்கு நிதியுதவி அளித்தார். 1962-ல் சீனாவுடனான போரின்போது இந்திய ராணுவத்திற்கு 600 கிலோ தங்கத்தை நன்கொடையாக அளித்தார். காமசுந்தரி மறைவால் தர்பங்கா அரச குடும்பத்தின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.

error: Content is protected !!