News November 20, 2024

நாதகவில் இருந்து மேலும் ஒருவர் விலகல் 

image

நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்டம், மேட்டூர் நகர துணைத் தலைவராக உள்ள ஜீவானந்தம் ராஜா கட்சியில் இருந்து விலகுவதாக தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் அறிவித்துள்ளார். அவருடன் சேர்ந்து மேலும் 40 உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். நாதக-வில் இருந்து தொடர்ந்துஅடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருவது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News November 18, 2025

சேலத்தில் அரங்கேறிய பகீர் மோசடி!

image

விருதுநகரைச் சேர்ந்த பாதமுத்து- மாதா தம்பதியினருக்கு திருமனமாகி 23 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இவர்களிடம் சேலத்தைச் சேர்ந்த அருண்குமார் உட்பட இருவர் சட்டப்பூர்வமாக குழந்தையைத் தத்தெடுத்துத் தருவதாகக் கூறி ₹3 லட்சம் பணத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. விசாரணை மேற்கொண்ட கருப்பூர் போலீசார் தாதகாபட்டியைச் சேர்ந்த மதுராஜ் மற்றும் ஏசுராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.அருண்குமாரை தேடி வருகின்றனர்

News November 18, 2025

சேலத்தில் அரங்கேறிய பகீர் மோசடி!

image

விருதுநகரைச் சேர்ந்த பாதமுத்து- மாதா தம்பதியினருக்கு திருமனமாகி 23 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இவர்களிடம் சேலத்தைச் சேர்ந்த அருண்குமார் உட்பட இருவர் சட்டப்பூர்வமாக குழந்தையைத் தத்தெடுத்துத் தருவதாகக் கூறி ₹3 லட்சம் பணத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. விசாரணை மேற்கொண்ட கருப்பூர் போலீசார் தாதகாபட்டியைச் சேர்ந்த மதுராஜ் மற்றும் ஏசுராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.அருண்குமாரை தேடி வருகின்றனர்

News November 18, 2025

சேலம் அருகே பயங்கரம்; தந்தையை கொலை செய்த மகன்!

image

சேலம்: ஓமலூர் பல்பாக்கி கிராமத்தில் தூத்துக்குடியை சேர்ந்த பால்சாமி (63) என்பவர் தீக்குச்சி கம்பெனியில் தங்கி பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இவரது மகன் மனோகரன் (30) மது போதையில் தகாறு செய்து இரும்பு சம்மட்டியால் பால்சாமியை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.ஓமலூர் போலீசார் மனோகரன் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!