News November 19, 2025

நாகை: 4-வது நாளாக தொடரும் தடை!

image

நாகை மாவட்டத்தில் கனமழை மற்றும் கடல் காற்றின் வேகம் அதிகரிப்பின் காரணமாக 4-ஆவது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக நாளொன்றுக்கு ரூ.5 கோடி அளவுக்கு மீன்பிடி வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 24, 2026

நாகை: உங்க பணத்தை பாதுகாக்க இத பண்ணுங்க!

image

நாகை மக்களே.. உங்கள் Gpay, phonepe, paytm போன்றவற்றில் தானாக பணம் போகிறதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு<> upihelp.npci.org.in என்ற <<>>இணைய தளம் சென்று மொபைல் எண்னை உள்ளிடவும். பின் Show my AUTOPAY Mandates என்பதை கிளிக் செய்து Mandates நிலையைச் சரிபார்த்து, ரத்து செய்யக் கோரலாம். இதன் மூலம் தானியங்கி பணப்பரிமாற்றத்தைத் தவிர்க்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News January 24, 2026

நாகை: சிறுவன் எடுத்த விபரீத முடிவு

image

வேதாரண்யம் அடுத்த வாய்மேடு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்து தூக்கிட்டு கொண்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

News January 24, 2026

நாகை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் உள்ள 193 கிராம ஊராட்சிகளிலும் வரும் ஜன.26-ம் தேதி குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், அரசின் திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!