News August 5, 2024
நாகை மீனவர்களின் காவல் 4-ஆவது முறையாக நீட்டிப்பு

நாகை மீனவர்கள் 10 பேரின் காவலை 4-ஆவது முறையாக நீடித்து இலங்கை மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவலை ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நீடித்ததால் மீனவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நாகை மீனவர்கள் 10 பேரை கடந்த ஜூன் 25-ஆம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News January 24, 2026
நாகை: உங்க பணத்தை பாதுகாக்க இத பண்ணுங்க!

நாகை மக்களே.. உங்கள் Gpay, phonepe, paytm போன்றவற்றில் தானாக பணம் போகிறதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு<
News January 24, 2026
நாகை: சிறுவன் எடுத்த விபரீத முடிவு

வேதாரண்யம் அடுத்த வாய்மேடு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்து தூக்கிட்டு கொண்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
News January 24, 2026
நாகை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் உள்ள 193 கிராம ஊராட்சிகளிலும் வரும் ஜன.26-ம் தேதி குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், அரசின் திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.


