News November 19, 2025

நாகை மாவட்டத்தில் 9.1 செ.மீ மழை பதிவு!

image

நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி, அதிகபட்சமாக நாகையில் 2.9 செ.மீ, தலைஞாயிறு 2.6 செ.மீ, திருப்பூண்டி 1.8 செ.மீ, திருக்குவளை 0.9 செ.மீ, வேளாங்கண்ணி 0.6 செ.மீ, வேதாரண்யம் 0.1 செ.மீ என மாவட்டம் முழுவதும் மொத்தம் 9.1செமீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றும் நாகை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 21, 2026

நாகை: மீன்பிடிக்கச் சென்ற 7 மீனவர்கள் கைது

image

மயிலாடுதுறை மாவட்டம் பெருமாள் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். இவருக்கு சொந்தமான ஃபைபர் படகில் நான்கு மீனவர்களும், வானகிரி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் சொந்தமான ஃபைபர் படகில் 3 மீனவர்கள் என 7 மீனவர்கள் கோடியக்கரையில் இருந்து கடலுக்கு நேற்று மீன் பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் இரவு நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளனர்.

News January 21, 2026

நாகை: இது உங்க போன்-ல கண்டிப்பாக இருக்கனும்!

image

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகளையும் வழங்கும் செயலிகள் உங்கள் போனில் உள்ளதா? இல்லை என்றால் இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு அலைவதை தவிர்கவும்.
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு, PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3. DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4. POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5. BHIM UPI – வங்கி பரிவர்த்தனை
6. M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ். SHARE IT

News January 21, 2026

நாகையில் 700 பேர் கைது

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று மறியல் போராட்டதில் ஈடுபட்டனர். இதில், 20சத்துணவு ஊழியர்களுக்கு கால முறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், பணிக்கொடை அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையலர் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி ஆர்பட்டத்தில் ஈடுப்பட்ட 700 பேரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!