News November 19, 2025

நாகை மாவட்டத்தில் 9.1 செ.மீ மழை பதிவு!

image

நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி, அதிகபட்சமாக நாகையில் 2.9 செ.மீ, தலைஞாயிறு 2.6 செ.மீ, திருப்பூண்டி 1.8 செ.மீ, திருக்குவளை 0.9 செ.மீ, வேளாங்கண்ணி 0.6 செ.மீ, வேதாரண்யம் 0.1 செ.மீ என மாவட்டம் முழுவதும் மொத்தம் 9.1செமீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றும் நாகை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 15, 2026

நாகை: 12 பைக்குகளை திருடிய நபர் கைது!

image

நாகை மாவட்டம் கீழையூர் காவல் எல்லைக்கு உட்பட்ட ஈ.சி.ஆர் ரோட்டில் வாகன திருட்டில் ஈடுபட்ட ராஜ்குமார் என்பவரை கைது செய்து கீழையூர் காவல் நிலைய போலீசார் விசரித்தனார். மேலும் அவரிடம் இருந்து ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள 12 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளை நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் பாராட்டினர்.

News January 15, 2026

நாகை: அரசு ஊழியர் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், நாகை மாவட்ட மக்கள் 04365-248460 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News January 15, 2026

நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் 2026-27 ஆம் கல்வியாண்டில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க, அங்கீகாரம் புதுப்பிக்க, மற்றும் புதிய பிரிவுகளை ஆரம்பிக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 28-ம் தேதியே கடைசி நாளாகும். எனவே விருப்பமுள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!