News October 13, 2025
நாகை: மாடால் பறிபோன உயிர்!

நாகையை சேர்ந்தவர் ராஜா (51), இவர் கடந்த 20-ந்தேதி நாகூரிலிருந்து நாகைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென மாடு குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயடைந்த அவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News December 15, 2025
நாகை: மழை ஓய்ந்தும் வயல்களில் வடியாத மழைநீர்

நாகை மாவட்டத்தில் கனமழை, புயல் காரணமாக 1.62 லட்சம் ஏக்கருக்கு அதிகமான சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மழை ஓய்ந்து 10 நாட்களுக்கு மேலாகியும், கீழப்பிடாகை உள்ளிட்ட பகுதிகளில் வயல்களில் தேங்கியுள்ள நீர் வடியாததால், சுமார் 750 ஏக்கர் பயிர்கள் முற்றிலும் அழுகக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே வேளாண் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.
News December 15, 2025
நாகை: வரி செலுத்துவது இனி ஈஸி!

நாகை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின்கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றை செலுத்தவும், வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் சென்று அலைய வேண்டாம். நீங்களே<
News December 15, 2025
நாகை: ரூ.1000 வரலையா இத பண்ணுங்க!

நாகை மக்களே ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வராதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேல்முறையீடு செய்வதற்கான வழிமுறை:
1.இங்கு <
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3.ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!


