News November 10, 2024
நாகை: புகையிலைப் பொருள் விற்பனை செய்த கடைக்கு சீல்

நாகப்பட்டினம், வெளிப்பாளையம், பச்சை பிள்ளை குளம் பகுதியில் இயங்கிவரும் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வந்த தகவலின் அடிப்படையில், நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் வெளிப்பாளையம் உதவி ஆய்வாளர் கோகுல்ராஜ் ஆய்வு இன்று மேற்கொண்டனர். அங்கு உள்ள கடையில் பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு, பின்னர் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
Similar News
News November 18, 2025
நாகை: கார் மோதி துடிதுடித்து பலி!

பாப்பாக்கோவிலை சேர்ந்தவர் மணிகண்டன் (30). இவர் நாகையில் இருந்து வேளாங்கண்ணிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக திரும்ப முயற்சிக்கும்போது எதிரே வந்த கார் மோதியது. இதில் மணிகண்டன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் காரை ஒட்டி பால்பாண்டிக்கு பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
News November 18, 2025
நாகை: கார் மோதி துடிதுடித்து பலி!

பாப்பாக்கோவிலை சேர்ந்தவர் மணிகண்டன் (30). இவர் நாகையில் இருந்து வேளாங்கண்ணிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக திரும்ப முயற்சிக்கும்போது எதிரே வந்த கார் மோதியது. இதில் மணிகண்டன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் காரை ஒட்டி பால்பாண்டிக்கு பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
News November 18, 2025
நாகை: லீவு குறித்து கலெக்டர் அறிவிப்பு!

நாகை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தற்பொழுது வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு எந்தவித விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் மாவட்டத்தின் அரசு, அரசு உதவி, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் இன்று வழக்கம்போல இயங்கும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். இதனால் விடுமுறை தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.


