News September 29, 2025
நாகை: தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் சேஷமூலை மற்றும் சியாத்த மங்கை ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் கணபதிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று செப்.29 நடைபெற்றது. இதில் தூய்மை பணியாளர்கள் தங்களது முழு உடலை இலவசமாக பரிசோதனை செய்துகொண்டனர். ஊராட்சி செயலாளர்கள் இதற்கான முன்னேற்பாடுகள் செய்தனர்.
Similar News
News November 15, 2025
நாகை விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 18.11.2025 அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் நாகை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News November 14, 2025
விவசாயிகள் வங்கிக் கணக்கில் ரூ.313 கோடி வரவு வைப்பு

நாகை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம், 03.09.2025 முதல் 13.11.2025 வரை 28,930 விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, இதுவரை ரூபாய் 313 கோடியே, 55 இலட்சத்து, 14 ஆயிரத்து 412 தொகை அவர்தம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் கொள்முதல் பணிகள் முழு வீச்சு நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News November 14, 2025
நாகை: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். இதனை ஷேர் பண்ணுங்க


