News April 17, 2024
நாகை: உடனே வெளியேற மாவட்ட ஆட்சியர் உத்தரவு

நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரங்கள் அனைத்தும் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது.
எனவே தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி 6 மணிக்கு மேல் வேட்பாளர்கள் உள்ளிட்ட யாரும் எவ்வித பிரச்சாரத்திலும் ஈடுபட கூடாது என்றும் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத அனைவரும் நாகை மாவட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் உத்தரவிட்டுள்ளார்
Similar News
News November 8, 2025
நாகை: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நாகை மாவட்டம் முழுவதும் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மறுவாழ்வு மையங்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள், போதை பயன்பாட்டிற்குள்ளானவர்கள் மறுவாழ்வு மையங்கள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் நவம்பர் மாதத்துக்குள் தமிழ்நாடு மனநல ஆணைய அலுவலகத்தில் விண்ணப்பித்து பதிவு செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News November 8, 2025
நாகை: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

நாகை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் <
News November 8, 2025
BREAKING: நாகையில் கிராம நிர்வாக அலுவலர் கொலை

வாழக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராமன்(40). கிராம நிர்வாக அலுவலராக இருந்த இவர் முகம் மற்றும் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2024-ல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்த அவர், நேற்று அவ்வழக்கு விசாரணைக்காக சென்றிருந்தார். இந்நிலையில், இன்று காலை செல்லூர் கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்துடன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.


