News March 19, 2024
நாகையில் கடல் சேற்றில் சிக்கிய வயதான தம்பதி

நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடலில் குளிக்க சென்ற சிக்கல் பொராவாசேரியை சேர்ந்த ஜெயராம் அவருடைய மனைவி கமலா இவர்கள் இண்டு பேரும் கடலில் குளிக்க சென்றனர். கடல் சேறாக இருப்பது தெரியாமல் அந்த பகுதியில் குளிக்க சென்ற பொழுது திடீரென இடுப்பளவு சேற்றில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்துள்ளனர். உடனடியாக தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஒரு மணி நேரம் போராடி காப்பாற்றினர்
Similar News
News February 11, 2026
நாகை: எஸ்பி தலைமையில் குறைதீர் கூட்டம்!

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் K. S. பாலகிருஷ்ணன் மக்களை சந்தித்து, குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்கள். மேலும்பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். பின்னர் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்திரவிட்டார்.
News February 11, 2026
நாகை: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

நாகை மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லை என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <
News February 11, 2026
கிராம உதவியாளர் சங்கத்தினர் 3- வது நாளாக போராட்டம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிறப்பு கால முறை ஊதியத்தை மாற்றி, கால முறை உதியமாக வழங்க வேண்டும். அடிப்படை ஊதியம் ரூ.15,700 வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 3வது நாளாக கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


