News August 9, 2025
நாகையில் அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

நாகை மாவட்டம் நாகூர் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிபவர் மாதவன்(44). இவர் நேற்று முன்தினம் அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து தலைமையாசிரியர் புனிதா கொடுத்த புகாரின்பேரில், நாகை போலீஸ் இன்ஸ்பெக்டர் வேம்பரசி மற்றும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மாதவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து, நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.
Similar News
News November 7, 2025
நாகை: ரூ.1 லட்சம் உதவித் தொகை அறிவிப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின எழுத்தாளர்களுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை பெற வரும் 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என் மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். இந்த பரிசு தொகை பெற தகுதியுடையோர் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் உள்ள அறை எண் 9-ல் செயல்படும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 7, 2025
நாகை: 3 நாட்களுக்கு குடிநீர் வராது!

மயிலாடுதுறை – நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிரதான நீருந்து குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதனை சரி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே நவம்பர் 7, 8 மற்றும் 9 ஆகிய மூன்று தேதிகளில் நாகை நகராட்சி, வேளாங்கண்ணி பேரூராட்சி, கீழ்வேளுர், கீழையூர், தலைஞாயிறு, திருமருகல் ஒன்றிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News November 7, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (நவ.5) இரவு 10 மணி முதல் இன்று (நவ.6) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.!


