News May 17, 2024

நாகர்கோவிலில் 9 போலீஸ் வாகனங்கள் ஏலம்.

image

குமரி மாவட்ட காவல் துறை சார்பில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு பொது ஏலம் விடப்படும். அந்த வகையில் போலீசாரால் பயன் படுத்தப்பட்ட வாகனங்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி நேற்று நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் கூடுதல் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா தலைமையில் நடைபெற்றது. ஏலத்தில் 5 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள் என மொத்தம் 9 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன.

Similar News

News November 15, 2025

குமரி: ரயில் மோதி ஒருவர் பலி

image

காவல்கிணறு ரெயில்வே தண்டவாளம் அருகே நவ 13ம் தேதி இரவு ரெயில் மோதி ஒருவர் இறந்து கிடந்தார். நாகர்கோவில் ரெயில்வே போலீஸ் விசாரணையில் திருவனந்தபுரம் விதுரா பகுதி லாரி டிரைவர் சரத்ராஜ்(32) என்பது தெரியவந்தது. இவர் காவல்கிணறு பகுதியில் இருந்து காய்கறிகள் ஏற்றிச்செல்ல அடிக்கடி வந்து செல்வாராம். அவ்வாறு வந்தபோது ரெயில் மோதி இறந்திருக்கலாம் அல்லது தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். 

News November 15, 2025

டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்ப பணிகள் பதவிகளுக்கு தேர்வு

image

அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் பதவிகளுக்கான தேர்வு வருகிற 16ம்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வினை கன்னியாகுமரி மாவட்டத்தில் கலைவாணர் என்.எஸ்.கே இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் சேவியர் கல்லூரி ஆகிய இரண்டு தேர்வுக் கூடங்களில் நடைபெறுகிறது. 310 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று தெரிவித்தார்.

News November 14, 2025

1500 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்: அதிகாரிகள் நடவடிக்கை

image

குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு அரிசி கடத்திச் செல்லப்படுவதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரிகள் இன்று மேற்கொண்ட சோதனையில் காஞ்சிரக்கோடு எந்த இடத்தில் காரில் கடத்திச் செல்லப்பட்ட 1500 கிலோ ரேஷன் அரிசியை கண்டுபிடித்தது பறிமுதல் செய்தனர். இது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

error: Content is protected !!