News April 7, 2024
நள்ளிரவில் வெடிகுண்டு சோதனை

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் இருக்கிறதா என்பது குறித்து பல்வேறு இடங்களில் நேற்று நள்ளிரவு சோதனைகள் நடைபெற்றது. இந்த சோதனையானது வரும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Similar News
News February 7, 2026
தூத்துக்குடி: பள்ளி மாணவன் பரிதாபமாக பலி

தூத்துக்குடி டவுண் தனியார் பள்ளியில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்று விட்டு நேற்றிரவு திரும்பிக் கொண்டிருந்தபோது வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் பேருந்தின் பின் கதவு எதிர்பாராத விதமாக திறந்தது. படிக்கட்டு வழியாக 9ம் வகுப்பு மாணவன் நவீன் குமார் என்பவர் கீழே விழுந்ததில் பின்னால் இருந்து வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வள்ளியூர் போலீஸ் விசாரணை.
News February 7, 2026
தூத்துக்குடி துறைமுகத்தில் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு தொடக்கம்

தூத்துக்குடி துறைமுகத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் இந்தியாவிலேயே முதல்முறையாக மேம்படுத்தப்பட்ட ட்ரோன் எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனுமதி இல்லா ட்ரான்களை கண்டறிந்து அதனை செயலிழக்க செய்யும் வகையில் இந்த அமைப்பு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல் முறை என்பதால் இந்த பெருமை தூத்துக்குடியைச் சாரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 7, 2026
தூத்துக்குடி பெண் கொலை; 8 ஆண்டுகளுக்கு பிறகு கைது

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலுப்பையூரணி பகுதியில் கடந்த 2018 ஆண்டு 48 வயது பெண்ணை தாக்கி கொலை செய்த சம்பவத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் 8 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த டேவிட், ராஜ் இருவரையும் கோவில்பட்டி காவல் கண்காணிப்பாளர் ஜெகநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.


