News February 24, 2025
நம்பியூரில் தற்கொலைக்கு முயன்ற பெண் பலி

நம்பியூர் அடுத்துள்ள குருமந்தூரைச் சேர்ந்தவர் ரேவதி (37). இவரது கணவர் குணசேகரன் கூலித் தொழிலாளி. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். குணசேகரன் மது குடிக்கும் பழக்கத்தால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் ரேவதி, வீட்டில் வைத்திருந்த பிரசர் மாத்திரைகளை அதிக அளவில் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News July 9, 2025
ஈரோடு: தம்பதி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

சிவகிரி, தம்பதி ராமசாமி, பாக்கியத்தை ஏப்ரல் 28 தேதி கொலை செய்த கும்பல், வீட்டிலிருந்த 10 பவுன் நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றது. முன்னதாக சிவகிரி இரட்டைக் கொலை, திருப்பூா் மூவா் கொலை வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ள ஆச்சியப்பன், மாதேஷ்வன், ரமேஷ் ஆகியோரிடம் காவல்துறையினரும் சிபிசிஐடி அதிகாரிகளும் விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
News July 9, 2025
2-ம் வகுப்பு ஈரோடு மாணவி சாதனை

ஓசூரில் மாநில அளவிலான நீச்சல் போட்டி நடந்தது. இதில் 250 மீட்டர் பிரிவில் ஈரோட்டை சேர்ந்த 2-ம் வகுப்பு படிக்கும் மாணவி டி.மகிழ்மதி 4 தங்கப்பதக்கங்களையும், ஒரு வெள்ளி பதக்கத்தையும் வென்று சாதனை படைத்தார். பதக்கங்களை குவித்த மாணவியை அவர் படிக்கும் பள்ளியின் தலைவர் சி.என்.ராஜா உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர். ஈரோடு மாணவிக்கு உங்களது வாழ்த்துகளை கமெண்ட் பண்ணுங்க மக்களே
News July 9, 2025
ஈரோட்டில் 3,717 கொடிக்கம்பங்கள் அகற்றம்

தமிழகத்தில் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலை, உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மத அமைப்புகள், சங்கங்களின் கொடிக்கம்பங்களை அகற்ற மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. அதன் படி ஈரோடு மாவட்டத்தில் இதுவரை அரசியல் கட்சிகள், ஜாதி, மத,பொது அமைப்பு, சங்கங்கள் சார்ந்த 3,717 எண்ணிக்கையில் அகற்றப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.