News January 13, 2025
நடைபாதையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள்

உதகை நகரில் நாளுக்கு நாள் பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கையால் நடைபாதையில் வாகனங்களை நிறுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் வாகனங்கள் வரும் சாலையில் நடக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்து எச்சரிக்கை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News November 8, 2025
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவி தொகை பெற மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உதவி தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை https://scholarships.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 2025-26 ஆண்டிற்கான தேசிய கல்வி உதவி தொகை விண்ணப்பிக்க பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் நீலகிரியை சார்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
News November 8, 2025
நீலகிரி: G Pay / PhonePe இருக்கா? இது முக்கியம்!

நீலகிரி மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News November 8, 2025
நீலகிரி: 12வது போதும்.. ரூ.30,000 சம்பளம்!

நீலகிரி மக்களே, தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதி சேவை நிறுவனத்தில், வாடிக்கையாளர் சேவை அதிகாரி (Customer Service Officer – CSO) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க nabfins.org/Careers/ என்ற முகவரியில் அணுகலாம். கடைசி தேதி 15.11.2025 ஆகும். SHARE பண்ணுங்க


