News August 5, 2024

நடுக்கடலில் மீனவர்களிடையே மோதல்

image

திருவள்ளூர் மாவட்ட பழவேற்காடு – பூம்புகார் மீனவர்களிடையே கடலில் திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. 5 நாட்டிக்கல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எல்லைத் தாண்டி வந்து மீன்பிடிப்பதாக, ஏற்கெனவே இவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News January 22, 2026

திருவள்ளூரில் மலிவு விலையில் கார், பைக் வாங்கலாம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 44 வாகனங்கள் வரும் ஜனவரி 29ஆம் தேதி காலை 10 மணி அளவில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலக ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்பட உள்ளன. இதில் 38 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இரண்டு மூன்று சக்கர வாகனங்கள் அடங்கும். மாவட்ட போலீஸ் எஸ் பி விவேகானந்தா சுக்லா தெரிவித்தார். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News January 22, 2026

திருவள்ளூர் மக்களே.., 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

image

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <>இங்கு <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க.

News January 22, 2026

திருவள்ளூர்: CBI வங்கியில் 350 காலியிடங்கள்! APPLY

image

திருவள்ளூர் மக்களே.., CBI வங்கியில் 350 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.44,480 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கு <>க்ளிக் <<>>செய்து பிப்.03-க்குள் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!