News October 20, 2025
தோப்பூரில் தூங்கிய பெண்ணிடம் நகை திருட்டு

மதுரை திருமங்கலம் அருகே தோப்பூரைச் சேர்ந்த சோனை முத்து 47 நேற்று முன்தினம் இவரது வீட்டில் அனைவரும் தூங்கினர். காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய மகள் ஆஷிகா 19 அணிந்திருந்த 2.5 பவுன் நகை வீட்டில் இருந்த அலைபேசியை மர்ம நபர் திருடி தப்ப முடியன்றார், சத்தம் கேட்டு எழுந்து வீட்டினர் மர்ம நபரை விரட்டிய போது அவர் தப்பினார். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 12, 2025
மீனாட்சி அம்மன் கோவிலில் நடை திறப்பு மாற்றம்

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகின்ற டிசம்பர் 16ம் தேதி முதல் ஜனவரி 15 2026 வரை நடைதிறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மார்கழி திருப்பள்ளியெழுச்சியை முன்னிட்டு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 3.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 12 மணிக்கு நடை சாத்தப்படும் பிறகு 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு நடை சாத்தப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News December 12, 2025
மதுரை: சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரர் பரிதாப பலி

மதுரை உசிலம்பட்டி அருகே எழுமலையைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் செல்வபாண்டி, விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த நிலையில், நேற்று (டிச. 11) மாலை மைத்துனர் அருண்குமாருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும்போது, முத்துராமலிங்க தேவர் கல்லூரி அருகே செங்கல் ஏற்றி வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உசிலம்பட்டி போலீசார் தப்பி ஓடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.
News December 12, 2025
மதுரை: ரேஷன் கார்டு இருக்கா…. முக்கிய அறிவிப்பு

மதுரை மாவட்டத்தில் ரேஷன் கார்டு குறித்த மக்கள் குறைதீர் முகாம் நாளை (13.12.25) நடக்கிறது. குடிமை பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில், நாளை காலை 10 முதல் மதியம் 1 மணி வரை முகாம் நடைபெறும்.இம்முகாமில் புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர்,முகவரி திருத்தம், போன்றவை குறித்து மனுக்கள் அளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.


