News January 14, 2025

தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்

image

தைப்பூச விழாவினை முன்னிட்டு (05.02.2025) முதல் (14.02.2025) வரை கோவை – திண்டுக்கல் இடையே (06106-06107) சிறப்பு MEMU முன்பதிவில்லா விரைவு ரயில் சேவை போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழநி வழியாக இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சேவையானது பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News November 14, 2025

அன்னூர் அருகே சம்பவ இடத்திலேயே பலி!

image

ஈரோட்டில் இருந்து அன்னூர் வழியாக ஊட்டிக்கு அரசு பேருந்து இன்று சென்றுள்ளது. அப்போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் வழியாக இளைஞர் ஒருவர் டூவீலரில் சென்றுள்ளார். பொகளூர் தாளத்துறை பிரிவு அருகே அரசு பேருந்தும், டூவீலரும் மோதியதில், இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

News November 14, 2025

உக்கடம் இளைஞர் விபரீத முடிவு!

image

கோவை உக்கடம் கோட்டைமேடை சேர்ந்தவர் அந்தோணி நோவா(31). இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த இவர் கடந்த சில மாதங்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட உறவினர்கள் கோவை ஜிஎச்சில் அனுமதித்த நிலையில் நேற்று பலியானார். உக்கடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 14, 2025

அன்னூரில் தோண்டி எடுக்கப்பட்ட உடல்!

image

அன்னூரில் முறையற்ற உறவு வெளியே தெரிந்ததால் மூதாட்டியை கொலை செய்து இயற்கை மரணமடைந்ததாக நாடகமாடிய நாகேஷ் – ஜாய் மெட்டில்டா ஆகியோர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட மயிலாத்தாளின் சடலம் நேற்று கோவை ஜிஎச் பேராசிரியர் மனோகரன், தடய அறிவியல் துறை உதவி இயக்குநர் ஆகியோர் தலைமையில் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு முக்கிய பாகங்கள் எடுத்து செல்லப்பட்டன.

error: Content is protected !!