News November 11, 2025
தேனி விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கம்பம் பகுதியில் தற்போது முதல் போக நெல் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு 2.ம் போகத்திற்கு என்.எல்.ஆர். என்ற ரகம் சாகுபடி செய்யப்பட்டது. தற்போதும் விவசாயிகள் அந்த ரகத்தை விரும்புகின்றனர். எனவே, என்.எல்.ஆர். மற்றும் ஆடுதுறை 54, கோ 55 ரக விதை நெல் 33 டன் வரை இருப்பு உள்ளது. விரும்பும் விவசாயிகள் கம்பம் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 11, 2025
டிச.15 ல் நிலைப்பாட்டை அறிவிப்பேன் ஓ.பி.எஸ்

சென்னையில் இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டம் குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க முயன்ற நிலையில் இதுகுறித்து டிச.15 ல் தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவிப்பேன் என தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
News December 10, 2025
தேனியில் மாணவர்களுக்கு ரூ.2 கோடி கல்விக்கடன்

தேனி அருகே வடபுதுபட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில், இன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பாக கல்வி கடன் முகாம் நடைபெற்றது. இதில் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி கடன் குறித்து எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து 56 மாணவர்களுக்கு இரண்டு கோடியே 56 லட்சம் மதிப்பிலான காசோலையை வழங்கினார். இதில் துறை சார்ந்த அலுவலர்கள் ஏராளமானோர் உடனிருந்தனர்.
News December 10, 2025
தேனியில் மாணவர்களுக்கு ரூ.2 கோடி கல்விக்கடன்

தேனி அருகே வடபுதுபட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில், இன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பாக கல்வி கடன் முகாம் நடைபெற்றது. இதில் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி கடன் குறித்து எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து 56 மாணவர்களுக்கு இரண்டு கோடியே 56 லட்சம் மதிப்பிலான காசோலையை வழங்கினார். இதில் துறை சார்ந்த அலுவலர்கள் ஏராளமானோர் உடனிருந்தனர்.


