News December 14, 2025

தேனி: மனைவி பிரிவால் கணவருக்கு நேர்ந்த விபரீதம்

image

அம்மாபட்டியை சேர்ந்த பாண்டியராஜன், தாரணி தம்பதிக்கு 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணமான ஒரு மாதத்திலேயே தாரணி கணவரை பிரிந்து சென்றார். இதனால் மன உளைச்சலில் இருந்த பாண்டியராஜன் நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு வீட்டில் இருமிக்கொண்டே இருந்தார். சிகிச்சைக்காக GHக்கு கொண்டு சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Similar News

News January 25, 2026

தேனி: போடி அருகே ஒருவர் மீது தாக்குதல்

image

போடி அருகே பெருமாள்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆசைத்தம்பி என்பவருக்கும் நிலம் வாங்குவது தொடர்பாக முன் விரோதம் இருந்தது. இந்த முன் விரோதத்தின் காரணமாக ஆசைத்தம்பி தூண்டுதலின் பேரில் கருத்தப்பாண்டி உள்ளிட்ட ஆறு பேர் கார்த்திக்கை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரில் போடி தாலுகா போலீசார் கருத்தபாண்டியை கைது செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர்.

News January 25, 2026

தேனி: ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் – APPLY…!

image

தேனி மாவட்ட மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News January 25, 2026

தேனியில் மோசடி செய்தவர் மீது வழக்கு

image

தேனியை சேர்ந்த பிச்சைமணி முகநூலில் கார் வாங்குவது குறித்து தகவல் தேடி வந்தார். அப்போது கோவையை சேர்ந்த பிரேம்சந்தர் என்பவர் தன்னிடம் ரூ.20.80 லட்சம் மதிப்பில் கார் உள்ளதாக கூறி பிச்சைமணியிடம் ரூ.2.50 லட்சம் முன்பணம் பெற்றுள்ளார். மீதி பணம் கட்ட பிச்சைமணி நேரம் கேட்ட நிலையில் பிரேம்சந்தர் காரை விற்றுவிட்டதாக கூறி பணத்தை தர மறுத்துள்ளார். இதுகுறித்து தேனி போலீசார் பிரேம்சந்தர் மீது வழக்குப்பதிவு

error: Content is protected !!