News September 30, 2025
தேனி: போலீஸ் ஸ்டேஷனில் ஒருவர் இறப்பு

செண்பகதொழுகுடி கிராம தலைவர் செல்லன் 80. அந்த கிராமத்தை சேர்ந்த இருவர் இடையே ஏற்பட்ட பிரச்னை போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது.அது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்துவதற்கு செல்லன் சாந்தாம்பாறை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். அங்கு திடீரென மயங்கி விழுந்தார். அவரை போலீஸ் வாகனத்தில் ராஜகுமாரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
Similar News
News December 11, 2025
தேனி: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

தேனி மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: <
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!
News December 11, 2025
தேனியில் EB கட்டணம் அதிகமா வருதா?

தேனி மக்களே உங்க வீட்டில் திடீரென மின் கட்டணம், நீங்க பயன்படுத்துவதை விட அதிகம் வருகிறதா. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் <
News December 11, 2025
தேனி: நாய் குறுக்கே புகுந்து இளைஞர் பலி

போடி அருகே முந்தல் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (22). இவர் நேற்று (டிச.10) அப்பகுதியில் உள்ள சாலையில் அவரது பைக்கில் சென்றுள்ளார். அப்பொழுது திடீரென நாய் குறுக்கே புகுந்ததால் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மணிகண்டன் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து குரங்கணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை.


