News November 19, 2025
தேனி: நெற்பயிருக்கு காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

தேனி: சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய நவ.30 வரை நீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. நெல் பயிருக்கு காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் பொது சேவை மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்கள் அல்லது 14447 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என வேளாண்துறையினர் தகவல்.
Similar News
News January 24, 2026
தேனி: போலீஸ் எனக் கூறி வழிப்பறி – ஒருவர் கைது

போடி பகுதியை சேர்ந்தவர் மதன்பிரபு. இவர் நேற்று முன் தினம் இரவு பைக்கில் தேவாரம் சாலையில் சென்றுள்ளார். அப்போது இவரை வழிமறித்த ஒருவர் தான் போலீஸ் எஸ்.ஐ எனக்கூறி பைக்கிற்கு உரிய ஆவணங்கள் இல்லை என ரூ.2,000 பெற்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த மதன்பிரபு போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து போடி தாலுகா போலீசார் போலீஸ் என கூறி ஏமாற்றிய சதீஷ்குமார் (42) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 24, 2026
தேனி: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

தேனி மக்களே, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது, பயிர்களை ஆய்வு செய்வது VAOவின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04567 230036) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.
News January 24, 2026
தேனி: டிராக்டர் மோதி இளைஞர் பரிதாப பலி

தேனி, அன்னஞ்சி விளக்கு முதல் வீரபாண்டி வரை செல்லும் புறவழிச் சாலையில் வீரப்ப அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு செல்லும் சாலையில் நேற்று பெரியகுளத்தில் இருந்து தேனி நோக்கி சென்ற டிராக்டர், தேவதானப்பட்டிக்கு பைக்கில் சென்ற சந்துரு (20) மீது நேருக்கு நேர் மோதியது. இதில் சந்துரு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் தேனி GH-க்கு அனுப்பி வைத்தனர்.


