News December 14, 2025

தேனி: குழந்தை இறந்த சோகத்தில் தந்தை தற்கொலை.!

image

தேனி பகுதியை சேர்ந்தவர் நந்தக்குமார் (27). இவரது மனைவி ஜெயப்பிரதா இந்த தம்பதிக்கு 2.5 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் கடந்த மாதம் குறை பிரசவத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்து, பிறந்த சில தினங்களில் உயிரிழந்தது. இதனால் மனவேதனையில் இருந்து வந்த நந்தகுமார் நேற்று முன்தினம் (டிச.12) வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அல்லிநகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Similar News

News January 25, 2026

தேனி: ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் – APPLY…!

image

தேனி மாவட்ட மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News January 25, 2026

தேனியில் மோசடி செய்தவர் மீது வழக்கு

image

தேனியை சேர்ந்த பிச்சைமணி முகநூலில் கார் வாங்குவது குறித்து தகவல் தேடி வந்தார். அப்போது கோவையை சேர்ந்த பிரேம்சந்தர் என்பவர் தன்னிடம் ரூ.20.80 லட்சம் மதிப்பில் கார் உள்ளதாக கூறி பிச்சைமணியிடம் ரூ.2.50 லட்சம் முன்பணம் பெற்றுள்ளார். மீதி பணம் கட்ட பிச்சைமணி நேரம் கேட்ட நிலையில் பிரேம்சந்தர் காரை விற்றுவிட்டதாக கூறி பணத்தை தர மறுத்துள்ளார். இதுகுறித்து தேனி போலீசார் பிரேம்சந்தர் மீது வழக்குப்பதிவு

News January 24, 2026

தேனி: 21 வயது ஆகிவிட்டதா? ரூ.25 லட்சம் வரை மானியம்

image

தமிழக அரசின் NEEDS திட்டத்தின் கீழ் முதல்முறை தொழில் தொடங்குவோருக்கு ரூ.25 லட்சம் வரை மானியம் தரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 21 வயது நிரம்பியவர்கள், குறைந்தபட்சம் 12th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, மேலும் தகவல் தெரிய இங்கு <>கிளிக் <<>>செய்யவும். ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை கடனுதவி கிடைக்கும். சுயதொழில் தொடங்க சூப்பர் திட்டம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க

error: Content is protected !!