News October 12, 2025

தேனி: கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த கிராமம்

image

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே நரியூத்து ஊராட்சியில் சாலைப் பணிகளுக்கு வனத்துறையினா் தடை விதித்ததை கண்டித்து சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை மக்கள் புறக்கணித்தனா். பிறகு மாவட்ட ஊரக வளா்ச்சி முகாமை இயக்குா் அபிதா ஹனீப் நரியூத்து கிராமத்துக்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால், நரியூத்து ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெறவில்லை.

Similar News

News December 12, 2025

தேனி: பூச்சி மருந்து குடித்து பெண் தற்கொலை

image

கதிர்நரசிங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் போதுமணி (43). இவருக்கு சில வருடங்களாக மனநிலை பாதித்த நிலையில் தான் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் போதுமணியின் கணவர் தோட்டத்துக்காக பூச்சி மருந்து வாங்கி வைத்திருந்த நிலையில் அதனை போதுமணி குடித்துள்ளார். அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (டிச.11) உயிரிழந்தார். ராஜ்தானி போலீசார் வழக்கு பதிவு.

News December 12, 2025

தேனி: SIR-ல் பெயர் இருக்கா? இல்லையா? CHECK பண்ணுங்க!

image

தேனி மக்களே, நீங்கள் நிரப்பி கொடுத்த SIR படிவத்தில் 2026 வாக்காளர் லிஸ்டில் உங்கள் பெயர் இருக்கிறதா? இல்லையா? என்பதை உங்க போனில் பார்க்க வழி உள்ளது
1.இங்கு <>க்ளிக்<<>> செய்து LOGIN பண்ணுங்க.
2. FILL ENUMERATION -ஐ தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவுசெய்யுங்க.
மேலே உள்ள புகைப்படம் போல் வந்தது என்றால் உங்க பெயர் சமர்பிக்கபட்டது. இல்லையென்றால் உங்கள் BLO அதிகாரியை தொடர்புகொள்ளுங்க. SHARE பண்ணுங்க

News December 12, 2025

தேனி: பைக் குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்து

image

கம்பம் நாராயணத்தேவன் பட்டியை சேர்ந்தவர் அரசக்குமார். இவர் தனது ஆட்டோவில் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்றார். கம்பம் GH அருகே கூடலூர் சாலையில் சென்றபோது பைக் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் காயமடைந்தனர். பின்பு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!