News November 18, 2024
தேனி: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Similar News
News December 7, 2025
மேகமலையில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா வேன்

மதுரையை சோ்ந்த வழக்கறிஞர் குமாா் தலைமையில் இரு வேன்களில் 22 போ் நேற்று (டிச.6) மேகமலைக்கு சுற்றுலா சென்றனா். 18வது கொண்டை ஊசி வளைவுகளை கடந்து மாதா கோயில் அருகே சென்ற போது ஒரு வேனின் முன் பக்கத்திலிருந்து கரும்புகை வெளியேறியது. உடனே வேனிலிருந்த 11 பேரும் கீழே இறங்கினா். இதையடுத்து வேன் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இச்சம்பவம் குறித்து ஹைவேவிஸ் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News December 6, 2025
ஆண்டிபட்டி: நாய் குறுக்கே புகுந்து விபத்து; ஒருவர் படுகாயம்

ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் ஞானசௌந்தர்ராஜ் (47). இவர் நேற்று (டிச.5) ஆண்டிபட்டி பகுதியில் அவரது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்பொழுது திடீரென நாய் குறுக்கே புகுந்ததில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஞானசௌந்தரராஜ் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
News December 6, 2025
தேனியில் மின்சாரம் தாக்கி தாய், மகள் காயம்

பெரியகுளத்தில் டீ கடை நடத்தி வருபவர் தாரிக். இவரது மனைவி ஹரினா துணிகளை துவைத்து கொடி கம்பியில் காயப் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக துணி உயர் மின்கம்பியில் விழுந்துள்ளது. அதை எடுக்க முயன்ற போது ஹரினா, இவரது மகள் மீது உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்தது. இதனால் காயமடைந்த இருவரும் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தென்கரை போலீசார் விசாரணை.


