News March 23, 2024
தேனியில் டிடிவி தினகரன் போட்டி!

தேனி எம்பி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட வேண்டும் என தானும், தனது மகன்களும் கேட்டுக்கொண்டதாக இன்று தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், தங்கள் விருப்பத்தை ஏற்றுக்கொண்ட டிடிவி தினகரன் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார் என அறிவித்துள்ளார். இதன்மூலம் தேனியில் பலத்த போட்டிக்கு வாய்ப்புள்ளது. காரணம் திமுக சார்பில் தங்கத்தமிழ்ச்செல்வன் களத்தில் உள்ளார். இதுபோக அதிமுகவின் இரட்டை இலையும் களமாடுகிறது.
Similar News
News November 9, 2025
தேனி அருகே கத்தியால் குத்திக் கொலை

வீரபாண்டி பகுதியை சோ்ந்தவா் விக்னேஷ் (25). ஆட்டோ ஓட்டுனரான இவர் நேற்று (நவ.8) தனது வீட்டில் அதே பகுதியை சோ்ந்த நண்பா்களான யுவராஜா, அபிஷேக் ஆகியோருடன் சோ்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் யுவராஜா, விக்னேஷை கத்தியால் குத்தியுள்ளார். இதில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் வீரபாண்டி போலீசார் யுவராஜா, அபிஷேக் ஆகியோரை கைது செய்தனர்.
News November 9, 2025
தேனி: ரூ.5 லட்சம் பரிசு அறிவிப்பு

நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி விருது மற்றும் பரிசுத்தொகை ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் தேனி மாவட்ட விவசாயிகள் போட்டி கட்டணமாக ரூ.150 செலுத்தி மார்ச்.31.க்குள் பதிவு செய்ய வேண்டும். இது குறித்த மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளலாம் என வேளாண் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். SHARE IT
News November 8, 2025
தேனி: ஆற்றங்கரையில் முதியவர் உடல் மீட்பு.!

சின்னமனூர் அருகே எல்லப்பட்டி பகுதியில் செல்லக்கூடிய முல்லைப் பெரியாற்றங்கரையில் நேற்று (நவ.7) முதியவர் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக சின்னமனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் கம்பம் பகுதியை சேர்ந்த மாயாண்டி (75) என்பதும், இவருக்கு ஏற்பட்ட உடல்நல குறைபாடு காரணமாக ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.


