News October 10, 2025
தேனியில் கல்லூரி மாணவி தற்கொலை

தேனி மாவட்டம், சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் வர்ஷினி பிரியா (18). கல்லூரி மாணவியான இவருக்கு கடந்த சில வருடங்களாக தீராத தலைவலி இருந்து வந்துள்ளது. அதற்கு சிகிச்சை எடுத்தும் பலன் அளிக்காத காரணத்தினால் மன வேதனையில் இருந்து வந்த வர்ஷினி பிரியா நேற்று (அக்.9) அவரது பெற்றோர்கள் கோவிலுக்கு சென்ற பொழுது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு.
Similar News
News December 9, 2025
தேனி: ஆற்றிற்குள் மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (50). இவர் நேற்று (டிச.8) மார்க்கையன்கோட்டை பகுதியில் உள்ள முல்லைப் பெரியாற்றில் துணி துவைத்து கொண்டிருந்துள்ளார். அப்பொழுது திடீரென மயங்கிய கிருஷ்ணன் ஆற்றுக்குள் விழுந்து மூழ்கியுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 9, 2025
தேனியில் வக்கீல் சேவை இலவசம்! தெரிஞ்சிக்கோங்க…

தேனி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.தேனி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04546-291566
2.தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 9, 2025
தேனி: கூட்டுறவு சங்க செயலாளர் சஸ்பெண்ட்

காமாட்சிபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் தற்காலிக கணினி இயக்குநராக பணிபுரிந்தவர் 3 ஆண்டுகளுக்கு முன் நிரந்தர பணியாளராக மாற்றப்பட்டுள்ளார். இதுகுறித்த ஆய்வில் அந்த பணியாளர் முறைகேடாக நிரந்த பணியாளராக மாற்றியது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக கூறி எரசக்கநாயக்கனுார் கூட்டுறவு சங்க செயலாளர் ராமரை சஸ்பெண்ட் செய்து கூட்டுறவு சங்க இணை பதிவாளர் நர்மதா உத்தரவிட்டுள்ளார்.


