News April 30, 2024
தேனிக்கு இயற்கை அளித்த வரம் மேகமலை!

மேகமலை காடுகள் ஏலக்காய் தோட்டங்களும், தேயிலை தோட்டங்களும் நிறைந்த இடமாகும். சுருளி அருவியின் பிறப்பிடமான மேகமலை, பசுமைமாறா காடுகள், தாவரங்கள், பறவைகள், விலங்குகள், காட்டு எருமைகள், மான்கள், புலிகள் போன்றவையை பார்வையிட ஏற்ற சுற்றுலாத் தலமாகும். மேகமலை புலிகள் சரணாலயம் 1016 சகிமீ பரப்பள கொண்டது. உலகில் உள்ள 36 பல்லுயிர் பெருக்கம் நிறைந்த பகுதிகளில் மேகமலை புலிகல் காப்பகமும் ஒன்று.
Similar News
News December 12, 2025
தேனி: பூச்சி மருந்து குடித்து பெண் தற்கொலை

கதிர்நரசிங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் போதுமணி (43). இவருக்கு சில வருடங்களாக மனநிலை பாதித்த நிலையில் தான் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் போதுமணியின் கணவர் தோட்டத்துக்காக பூச்சி மருந்து வாங்கி வைத்திருந்த நிலையில் அதனை போதுமணி குடித்துள்ளார். அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (டிச.11) உயிரிழந்தார். ராஜ்தானி போலீசார் வழக்கு பதிவு.
News December 12, 2025
தேனி: SIR-ல் பெயர் இருக்கா? இல்லையா? CHECK பண்ணுங்க!

தேனி மக்களே, நீங்கள் நிரப்பி கொடுத்த SIR படிவத்தில் 2026 வாக்காளர் லிஸ்டில் உங்கள் பெயர் இருக்கிறதா? இல்லையா? என்பதை உங்க போனில் பார்க்க வழி உள்ளது
1.இங்கு <
2. FILL ENUMERATION -ஐ தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவுசெய்யுங்க.
மேலே உள்ள புகைப்படம் போல் வந்தது என்றால் உங்க பெயர் சமர்பிக்கபட்டது. இல்லையென்றால் உங்கள் BLO அதிகாரியை தொடர்புகொள்ளுங்க. SHARE பண்ணுங்க
News December 12, 2025
தேனி: பைக் குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்து

கம்பம் நாராயணத்தேவன் பட்டியை சேர்ந்தவர் அரசக்குமார். இவர் தனது ஆட்டோவில் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்றார். கம்பம் GH அருகே கூடலூர் சாலையில் சென்றபோது பைக் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் காயமடைந்தனர். பின்பு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.


