News August 22, 2024

தெலுங்கானா குற்றவாளி சென்னையில் கைது

image

சென்னை விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து வந்த பயணி ஒருவரை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனர். அவர், தெலுங்கானாவைச் சேர்ந்த சந்தீப் குமார்(30) என்பதும், 2016 ஆம் ஆண்டு முதல் தெலுங்கானா போலீசாரால் தேடப்படும் குற்றவாளி என்பதும் அவரது பாஸ்போர்ட்டை பரிசோதித்த போது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த விமான நிலைய அதிகாரிகள் தெலுங்கானா போலீசிடம் ஒப்படைத்தனர்.

Similar News

News November 11, 2025

சென்னை: முக்கிய தொடர்பு எண்கள்!

image

பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் காவல் துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையம் – 044-23452726, எழும்பூர் – 044-28455168, கிண்டி – 044-24700011, புளியந்தோப்பு -044-23452523, தி,நகர் – 044 – 23452614. இந்த எண்களை உங்களுக்கு தெரிந்த அனைத்து பெண்களுக்கும் பகிர்ந்து சேவ் பண்ண சொல்லுங்கள்.

News November 11, 2025

சென்னை: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News November 11, 2025

சென்னை: திருமாவளவன் பேனரால் சர்ச்சை

image

தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி, திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தை கட்சி, சென்னை மிண்ட் தங்கசாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் தலைவர் தொல் திருமாவளவனை “வருங்கால முதல்வர்” எனக் குறிப்பிடும் பேனர் வைக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!