News August 19, 2024
தென் கடல் விசைப்படகுகளுக்கு நாளை மீன்பிடிக்க அனுமதி

மண்டபம் தென் கடல் விசைப்படகுகளுக்கு நாளை (ஆக. 20) மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கப்படும். காற்றின் வேகம் அதிகம் என்பதால் தொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் உயிர் காப்பு மிதவை, உயிர் காக்கும் சட்டை, படகு பதிவு, காப்பீடு சான்றுகள், மீன்பிடி உரிமம், மீன்பிடி அனுமதி சீட்டு, மீனவர் அடையாள அட்டை, ஆதார் கார்டு ஆகியற்றை எடுத்துச்செல்லுமாறு மண்டபம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 20, 2026
இராம்நாடு: பெண்களுக்கு ரூ.5000 + ரூ.6000!

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு (5000+6000) வழங்கப்படுகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால், அதற்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகே உள்ள சுகாதார மையத்திலோ (அ) இங்கே <
News January 20, 2026
இராம்நாடு: கடன், வறுமை, தடை நீக்கும் முருகன் கோவில்!

தேவிபட்டினம், பெருவயல் விலக்கு அருகே உள்ளது ரண பலி முருகன் கோயில். பெருவயல் வந்த வாரியார் சுவாமிகள், “நான் எத்தனையோ தலங்களில் முருகனை தரிசித்திருக்கிறேன். ஆனால் வேலில் முருகன் உருவம் பதித்திருப்பதை பெருவயல் கோயிலில்தான் கண்டேன்”. இந்த வேலை வழிபாடு செய்வதால் பக்தர்கள் வாழ்வில் உள்ள கடன், வறுமை, சுபகாரியத் தடை, எதிரிகளின் தொல்லை போன்ற சத்ருக்களை இந்த வேல் சம்காரம் செய்கிறது என கூறியுள்ளார். *SHARE
News January 20, 2026
BREAKING: பரமக்குடி அருகே விபத்து; இருவர் பலி

நயினார்கோவில், மஞ்சகொல்லை கிராமத்தை சேர்ந்த தமிழரசன் மற்றும் அவரது நண்பர் மனோஜ்குமார், நேற்று இருவரும் பாண்டியூரில் இருந்து மஞ்சகொல்லை நோக்கி பைக்கில் சென்றனர். அப்போது அரசடிவண்டல் கிராமம் அருகே அக்கிரமேசி கிராமத்தை சேர்ந்த மனோஜ்குமார் ஒட்டி வந்த பைக் நேருக்கு நேர் மோதியதில் தமிழரசன், எதிரே டூவீலரில் வந்த மனோஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மனோஜ்குமார் மருத்துவமனையில் அனுமதி.


