News January 24, 2026
தென்னக ரயில்வே சூப்பர் அறிவிப்பு!

குடியரசு தினம் முதல் சோழன் விரைவு வண்டி(Sl no: 104,105) திருவெறும்பூரில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக திருவெறும்பூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இந்தாண்டு நிறைவேறியுள்ளது. இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட திருச்சி எம் பி துரை வைகோவுக்கு திருச்சி மக்கள் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
Similar News
News February 16, 2026
திருச்சி: குறைதீர் கூட்டத்தில் 723 மனுக்களுக்கு தீர்வு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் கல்வி உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், பென்சன் நிலுவை தொகை, நில ஆக்கிரமிப்பு தொடர்பான மனுக்கள், வேலைவாய்ப்பு கோரிக்கை, மருத்துவம் மற்றும் இதர பணி தொடர்பான மனுக்கள் என 723 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, அதன் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News February 16, 2026
திருச்சி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

திருச்சி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News February 16, 2026
திருச்சி – காரைக்கால் டெமு ரயில் ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி – காரைக்கால் டெமு ரயில் வரும் 17, 18, 19, 20, 21, 22 ஆகிய தேதிகளில் திருவாரூர் – காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சியில் இருந்து திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என, திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


