News November 29, 2024
தென்காசி: கொலை குற்றவாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை

தென்காசி மாவட்டம் மேல மெஞ்ஞானபுரத்தில், கடந்த 2022 ஆம் ஆண்டு சாமுவேல் துரைபாண்டி(70) என்பவரை கொலை செய்த வழக்கில் மேல மெஞ்ஞானபுரம் ஏழுமலை(45) என்பவரை குற்றாலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கின் விசாரணை தென்காசி கூடுதல் அமர்வு விரைவு நீதிமன்றத்தில் நேற்று(நவ.,28) வந்தபோது, குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி மனோஜ் குமார் தீர்ப்பளித்தார்.
Similar News
News November 16, 2025
தென்காசி: 10th முடித்தால் மத்திய அரசு பள்ளியில் வேலை உறுதி!

தென்காசி மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14967 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிபடையில் தேர்வு செய்யப்படும். மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க <
News November 16, 2025
தென்காசி மக்களே இந்த இடங்களை NOTE பண்ணுங்க

தென்காசி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) முகாம் இன்றும் (நவ. 16) நடைபெறுகிறது. இலஞ்சி தேவர் சமுதாய நலக்கூடம், மேலகரம் டவுன் பஞ்சாயத்து நலக்கூடம், தென்காசி எம்.கே.வி.கே. கல்யாண மண்டபம், தென்காசி முப்புடாதி அம்மன் கோவில் திருமண மண்டபம், பாவூர்சத்திரம் சமுதாய நலக்கூடம், கீழசுரண்டை ஸ்ரீ குறிஞ்சி மஹால் உள்ளிட்ட இடங்களில் SIR முகாம்கள் இன்று நடைபெறும். SHARE
News November 16, 2025
புளியங்குடியில் நாளை மாபெரும் இலவச மருத்துவ முகாம்

புளியங்குடியில் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தமுமுக மருத்துவ அணி, சார்பில் மாபெரும் இலவச பொது மருத்துவம் முகாம் நாளை (16.11.25) காலை 9 மணி முதல் 2 மணி வரை காயிதே மில்லத் பள்ளியில் நடைபெறும். 26வது வார்டு தலைவர் பரூக், தலைமையில் மமக கட்சி நகர செயலாளர் முகைதீன் அப்துல் காதர் துவக்கி வைக்கிறார். பொது மருத்துவம் நோயாளிகளுக்கு வழங்கப்படும். ஷேர்


