News October 13, 2025

தென்காசி: கடையம் அருகே பயங்கரம் – ஒருவர் கொலை!

image

தென்காசி, கடையம் அருகே ராஜா குடியிருப்பு பகுதியை சேர்ந்த வினோத் கனி (40), பன்றிப் பண்ணை அருகே மர்ம நபர்களால் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொல்லப்பட்டார். சம்பவ இடத்தில் அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த கடையம் போலீசார் உடலைக் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Similar News

News December 14, 2025

தென்காசி: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

image

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகில் உள்ள கரிவலம்வந்தநல்லூர் சந்தை தெருவை சேர்ந்த மாரிமுத்து என்பவர், குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று முன்தினம் இரவு வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுக்குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

News December 13, 2025

தென்காசி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

image

தென்காசி மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இத்திட்டம் இம்மாத (31/12/2025) இறுதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை SHARE பண்ணுங்க.!

News December 13, 2025

தென்காசி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

தென்காசி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் தென்காசி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் (9445000478, 9342595660) புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.

error: Content is protected !!