News May 4, 2024
தென்காசி அருகே விபத்து;சம்பவ இடத்தில் மரணம்

கடையம் ராமலிங்கபுரத்தை சேர்ந்த முத்து (47) என்பவர் இரவணசமுத்திரம் இரயில்வே கேட் மேல்புறம் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது ஹெட் லைட் வேலை செய்யாமல் இருந்த இருசக்கர வாகனத்தை அதிவேகத்தில் ஓட்டி வந்து மோதியதில் முத்து
சம்பவ இடத்திலேயே உயிருக்கு போராடி பலியானார். பலியானவரின் உடல் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்தவர் காயம்.
Similar News
News November 14, 2025
தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில், இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் போது, பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்று கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
News November 13, 2025
தென்காசியில் வரும் 16ஆம் தேதி கண் சிகிச்சை முகாம்

தென்காசி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க உதவியுடன் தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட சுப்பராஜா சேரிட்டி டிரஸ்ட் பில்டிங்கில் வரும் நவ.16ம் தேதி இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. நாளை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
News November 13, 2025
செங்கோட்டை – நெல்லை ரயில் 13 நாட்கள் ரத்து

நெல்லை ரயில் நிலைய 6வது பிளாட்பாரம் அமைக்கும் பணி காரணமாக செங்கோட்டையிலிருந்து காலை 10.05 மணிக்கு நெல்லைக்கு புறப்படும் ரயில் நெல்லையிலிருந்து மதியம் 1.40 மணிக்கு செங்கோட்டை புறப்படும் ரயில் ஆகியவை சேரன்மகாதேவி – நெல்லை – சேரன்மகாதேவி இடையே இன்று 13ம் தேதி மற்றும் 14, 15, 17, 19, 20, 21, 22, 24, 25, 26, 28, 29 ஆகிய தேதிகளில் பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


